Thivaraka view
Digitalcreator
பண்டாரநாயக்க அறக்கட்டளை சந்திரிகாவின் சொத்தல்ல தெரிந்து கொள்ளுங்கள்
05/12/2025
பசறை மலைச்சரிவில் மூன்று நாட்கள் மண்ணுக்குள் சிக்கிய குடும்பம்: உயிர் தப்பிய அதிசய மீட்பு
பசறை நகரை பல நாட்களாக மூழ்கடித்த கனமழை மிகப்பெரிய மலைச்சரிவாக மாறி, குணபாலவின் சிறிய வீட்டை முழுவதுமாக புதைத்தது. அந்த வேளையில் குணபால, அவரது மனைவி சீதா மற்றும் பத்து வயது மகன் சமீரா ஆகியோர் சமையலறையில் இருந்தனர். வீடு முழுவதும் இடிந்து மண்ணில் புதைந்த போதிலும், சமையலறை பகுதி மட்டும் அதிசயமாக இடிக்காமல் தப்பியது.
அந்த இருள், ஈரம், குறைந்த காற்றோட்டம், பசி, தாகம் ஆகியவற்றின் நடுவே அவர்கள் மூன்று நாட்கள் உயிர் போராட்டத்தில் இருந்தனர். நம்பிக்கையை மட்டும் பிடித்து அவர்கள் தங்கள் உயிரை தக்க வைத்தனர்.
மூன்றாம் நாளில் கனரக இயந்திரங்களின் அதிர்வுகள் மேலிருந்து கேட்டவுடன் குணபால சிறிய ஓட்டையில் கரண்டியால் தட்டி தன் இருப்பை அறிவித்தார். சில நிமிடங்களில் ராணுவ மீட்புக் குழுக்கள் அவர்களை அடையாளம் கண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.
முதன்முறையாக நுழைந்த ஒளிக்கதிரே அவர்களுக்கு இரண்டாவது பிறவியைப் போன்ற அனுபவமாய் இருந்தது. ராணுவ வீரர்கள் கவனமாக மண் அடுக்குகளை அகற்றி, மூவரையும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து மருத்துவ குழுவிடம் ஒப்படைத்தனர்.
அவர்களின் வீடு மண்ணில் மறைந்திருந்தாலும், உயிர் மட்டும் காப்பாற்றப்பட்டது. இயற்கை பேரிடர்களில் மக்களின் உயிருக்காக போராடும் முப்படை வீரர்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பே இந்த அதிசயத்தை ஏற்படுத்தியது.
பசறையில் நடந்த இந்த மீட்பு செயல், நாட்டின் அனைத்து மீட்பு பணியாளர்களுக்கும் ஒரு உயிர்த்த அஞ்சலியாக திகழ்கிறது.
04/12/2025
வீடுகளில் கார்த்திகை தீபம் 🪔
02/12/2025
என்னால முடிந்தது
#இன்றைய வானிலை!
காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு காலக்கெடு நீடிப்பு!
01/12/2025
கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய யாழ் இளைஞனின் உடலம் மீட்பு
30/11/2025
பல கனவுகளுடன் கட்டப்பட்ட வீடு இன்று (சிங்கள இளைஞனின் பதிவு)
#முழமையாக இலங்கையை விட்டு நீங்கியது டிட்வா புயல்
28/11/2025
மிகமெதுவான வேகத்தில் நகர்ந்தபடி மட்டக்களப்பு நிலப்பகுதியின் மேல் நீடிக்கும் நிகழ்வானது, தரையில் காணப்படும் எதிர்மறை காரணிகளின் தாக்கத்தால் அதிக காற்றை ஈர்த்து முன்னேறமுடியாமல் சற்றே பலமிழந்து காணப்படுகிறது. இது இன்று மாலை அளவில் மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்வை மேற்கொண்டு திரிகோணமலை ஊடாக வடக்கு நிலப்பரப்பை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் வானிலை மெல்ல சீரடைவதோடு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தற்போது கிடைத்துவரும் சராசரி மழைவீழ்ச்சி மாலை நேரத்தில் கனமழையாக அதிகரிக்கக்கூடும்.
அடுத்துவரும் 24 மணிநேரத்தை பொறுத்தவரை, வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் 150-200 மிமீ வரையான அதீத மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
ஏற்கனவே வெள்ளம் பாதித்த வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நில பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக செயற்படுவது மிக அவசியமாகின்றது.
மேலும், காற்றின் வேகம் தற்போது மணிக்கு 60கிமீ என்ற அளவு வரை காணப்படுவதோடு, இன்று மாலை வேளையில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட கரையோர மாவட்டங்களில் 70kmph என்ற அளவில் சற்றே அதிகரித்தும் காணப்படலாம். எனினும் புயல் தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை.
இந்நிகழ்வானது மேலும் வடக்கே நகர்ந்து, இன்றிரவு முதல் வடக்கு மாகாண நிலப்பரப்பை ஊடறுத்தபடி நாளை (29) தமிழக கரையை அடையும் என்றும் எதிர்வுகூறப்படுகிறது. மேலும் தீவிரமடைய வாய்ப்பில்லை.
இதனால் நாளை சனிக்கிழமை இரவு முதல் வடக்கிலும் மழையின் தாக்கம் மெல்ல குறைவடைந்து வானிலை முழுமையாக சீரடையலாம் எனவும் கணிக்கப்படுகிறது.!
28.11.2025 - 11.10 AM
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Jaffna
Jaffna
40000