New Uthayan

New Uthayan

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from New Uthayan, Media/News Company, Jaffna.

Photos 27/12/2016

கிரில்டு சிக்கன் (அவனில் செய்யும் முறை)

தேவையானவை:

முழுக் கோழி - 1 கிலோ

மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 4 டேபிஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை - ஒன்று

உருளைக்கிழங்கு - இரண்டு

அலுமினியம் ஃபாயில் - தேவையான அளவு

உப்பு - ஒன்றரை டேபிஸ்பூன்

செய்முறை:

முழுக் கோழியைத் தோலுடன், அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள அனைத்தையும் நீக்கிவிட்டுத் தரும்படி கடையிலேயே கேட்டு வாங்கவும். வாங்கிவந்த முழுக் கோழியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும்(கோழியில் சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துத் தேய்த்தும் கழுவிக்கொள்ளலாம்).

மசாலாத்தூள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, அரை மூடி எலுமிச்சைச் சாற்றை அதில் பிழிந்து, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான மசாலாவாகப் பிசையவும். அந்த மசாலாவை, கழுவி வைத்திருக்கும் கோழியின் மேலும், உட்பகுதியிலும் நன்றாகத் தடவவும்(மசாலா கெட்டியாக இருந்தால் மட்டுமே கோழியுடன் பிடித்துக்கொள்ளும் என்பதால், மசாலா பேஸ்ட் செய்யும்போது தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம்). வயிற்றின் உள் பகுதியில் மீதமிருக்கும் எலுமிச்சையை இரண்டு துண்டுகளாக்கி வைக்கவும். அப்போதுதான் நாம் தடவி வைத்திருக்கும் மசாலாவின் சாறு வயிற்றுப் பகுதியில் இறங்கி சுவை கொடுக்கும் மசாலா தடவிய கோழியை ஒரு பாக்ஸ் அல்லது ப்ளாஸ்டிக் பையில் வைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும்(ஃப்ரீஸரில் அல்ல). ஓர் இரவு இப்படி வைத்து மறுநாள் வெளியே எடுத்து, ரூம் டெம்ப்பரேச்சருக்கு வரும்வரை வைத்திருக்கவும்.

அவனை 10 நிமிடங்களுக்கு 200 டிகிரி செல்சியஸில் ப்ரீஹீட் செய்யவும். அலுமினியம் ஃபாயில் பேப்பரை உருட்டி, சிறிய உருண்டைகளாகச் செய்து வைக்கவும். ஒரு பேக்கிங் ட்ரேயில் அலுமினியம் ஃபாயிலைப் பரப்பவும். அதில் இரண்டு உருளைக்கிழங்குகளை நறுக்கிச் சேர்க்கவும். கூடவே உருட்டிய அலுமினியம் ஃபாயில் பேப்பர் உருண்டைகளையும் சேர்க்கவும். இந்த ஃபாயில் பேப்பர் உருண்டைகளின் மேல் சிக்கனை வைக்கவும். இந்த ஃபாயில் பேப்பர் உருண்டைகள் சிக்கனின் முதுகுப்பகுதி, அதாவது அடிப்பாகம் டிரேயின் சூட்டில் கருகாமல், முழுமையாக வேக உதவும்.

இப்போது இதை அவனின் நடு ரேக்கில் வைத்து 200 டிகிரி செல்சியஸில் 15 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் 170 டிகிரி செல்சியஸுக்கு மாற்றி ஒரு மணி நேரம் வேகவிடவும். (முதலில் வெப்பம் அதிகமாக வைப்பதால் சிக்கன் ஜுஸியாக இருக்கும்).

அவனை இடையிடையே இரண்டு முறை திறந்து பார்த்து, வெந்த சிக்கனில் இருந்து வடிந்திருக்கும் சாற்றை, ஃபுட் பிரஷ் மூலம் தொட்டு சிக்கன் மேலே தடவ வேண்டும் (அல்லது, வெண்ணெய்/சன்ஃபிளவர் ஆயில் சிறிது மேலே தடவிவிடலாம்). இது சிக்கன் டிரை ஆவதைத் தடுக்கும்.

முடிந்ததும் எடுத்து அப்படியே பரிமாறலாம். கீழுள்ள உருளைக்கிழங்கு சிக்கன் வெளியிட்ட சாறில் நன்றாக வெந்திருக்கும். அதையும் சாப்பிடலாம்.

Photos 26/12/2016

மாஸ்மலோஸ்

தேவையான பொருட்கள்:
சீனி 500g
ஜெலட்டின் 25g
கலரிங் விரும்பிய
ஐசிங்சுகர் / கோன் பிளவர் 100g
மாஜரின் சிரியளவு

செய்முறை:
சீனியை 3/4 டம்ளர் நீரில் பாகு காய்ச்சவும் .அதே நேரம் ஜெலட்டினை 3/4 டம்ளர்கொதித்த சுடுநீரில் நன்றாகக் கரைக்கவும்.
பின்னர் ஜெலட்டினை காய்ச்சிய சீனிப்பாகுனில் நன்றாகக் கலந்து வெள்ளை நிறம் வரும்வரை அடிக்கவும் .
பின்னர் விரும்பிய கலரிங் ஐ சேர்த்து மாஜரின் பூசிய தட்டில் பரவவும் . 2முதல் 3 மணித்தியாலங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிர்விக்கவும்.
பின்னர் ஐசிங்சுகரை அதன்மேல் தூவி விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும்

Photos 26/12/2016

பாசி பயிறு பணியாரம்:

தேவையான பொருட்கள்:
பாசி பயிறு – 200 கிராம்
புழுங்கல் அரிசி – 50 கிராம்
உளுந்து, வெந்தயம் – 25 கிராம் செய்முறை:

முதல் நாள் இரவு பாசி பயிறு, புழுங்கல் அரிசி, மற்றும் உளுந்து+வெந்தயம் தனித்தனியாக இம்மூன்றையும் ஊற வைத்துக் கொள்ளவும்.

காலையில் தனித்தனியாக கரகரப்பாக அரைத்து ஒன்றாக கலக்கி பணியாரமாக ஊற்றி எடுக்கலாம்.

Photos 26/12/2016

திரிகடுகம்

திரிகடுகம் -என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சில பாடல்கள்
ஒருவன், உயர்வும் ஊக்கமும் பெறவேண்டுமானால், உலகத்தோடு எப்படி ஓட்ட ஒழுகவேண்டும் என்பது பற்றி, கூறும் 56வது பாடல்

“ முந்தை எழுத்தின் வரவுணர்ந்துபிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு –வந்த

ஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும்

விழுப்ப நெறி தூராவாறு



பிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மையை சொல்லும் 6வது பாடல்

“ பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும்—அறவினையைக்

காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும்

ஊராண்மை என்னும் செருக்கு.

Photos from New Uthayan's post 19/12/2016

26 Amazing Creations Made From Bottles Waste!

Photos 19/12/2016
Photos 17/12/2016

இயற்க்கையின் படைப்பின் இரண்டு முகங்களை கொண்ட அதிசய பறவை....

Photos 17/12/2016

இந்த நாயின் செயலை கண்டிப்பாக பாராட்டலாம்

Want your business to be the top-listed Media Company in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Jaffna
40000