Kumarasingam Kamsan

Kumarasingam Kamsan

Share

Law, the discipline and profession concerned with the customs, practices, and rules of conduct of a

08/01/2023

நான் வசந்தம் வானொலியில் (Vasantham FM 102.6/102.9 FM) நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளேன். இயலுமானவர்கள் கேட்டுப் பயன் பெறலாம்.

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இன்றைய தினம் (08.01.2023 ஞாயிற்றுக் கிழமை) இலங்கை நேரப்படி காலை
8.00 - 10.00 மணிக்கு சட்டம் விசேட நிகழ்சியில் வசந்தம் வானொலியில் ஒளிபரப்பாகும்.

சட்டத்தரணி குமாரசிங்கம் கம்ஷன்

இதனை Online இல் கேட்பதற்கு : https://www.vasanthamfm.lk/

07/12/2022

உலகின் மிக சிறந்த கொள்கை "If you want success in your life break the rules"

இன்றளவில் நாங்கள் எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் வரை அந்த காலம், வயது வரும் வரை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அந்த கொள்கையை மீறி தங்களுக்கான சந்தர்ப்பத்தை தாங்களே ஏற்படுத்தி வெற்றி பெற்றவர்கள் தான் உலகளவில் அதிகம் பேசப்படுகிறார்கள்.

இலங்கையில் 14 வயதில் ஒரு சிறுவன் வணிகப் பிரிவில் 3B சித்திகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்ல தேர்வாகியுள்ளார்.

நாங்கள் இன்னும் 14 வயதில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமா என்று யோசித்து விட்டு 15 வயது ஆகும் வரை காத்துக் கொண்டு இருப்போம். ஆனால் அந்த சிறுவன் 13, 14 வயதில் க.பொ.த சாதாரண தர பரிட்சைக்கு விண்ணப்பித்து சித்தியடைந்து 6 மாதத்திலேயே க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கும் விண்ணப்பித்து அதிலும் 3B பெறுபெற்றவுடன் வணிகப் பிரிவில் சித்தியடைந்து பல்கலைக் கழகம் செல்லும் நிலைக்கு தெரிவாகியுள்ளார்.

அவர் எவ்வாறு விண்ணப்பித்தார் அதில் உள்ள சட்ட நுணுக்கம் பற்றி கூறலாம். (ஆனால் பொது வெளியில் கூறுவது பொருத்தம் அல்ல)

ஆகவே எல்லோரும் பின்பற்றும் வழியை தான் நாமும் பின்பற்ற வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் யாருக்கும் இல்லை. அதைவிட சரியான வினைத்திறனான வழியை கூட பற்றலாம்.

So, Think in different way and break the social rules and success your goal.

Photos from Kumarasingam Kamsan's post 06/12/2022

அரச ஊழியர்கள், 55 வயது பூர்த்தியாகும் போது ஓய்வு பெற உத்தரவு கிடைக்கும். அது தவிர ஏதும் விசேட நிலைமைகள் இருந்தால் சேவை 60 வயது வரை நீடிக்கப்படலாம். எவ்வாறு இருப்பினும் 60 வயதில் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும்.

இந்த நடைமுறை 01.01.2023 இல் இருந்து நடைமுறைக்கு வரும்.

03/12/2022
03/12/2022

தொழில் செய்யும் இடத்தில் உருவாகும் மன அழுத்தம் என்பது மிக மோசமானது. இது தொடர்பில் குறித்த தொழில் வழங்கும் நிறுவனம் சரியான கவனம் செலுத்த வேண்டும் என்பது நியாயமான ஒரு எதிர்பார்ப்பு.

அதிலும் தொழில் தர்மம், நேர்மை மற்றும் நியாயமாக தொழில் செய்பவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மிக அதிகமானது.

24/11/2022

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தால் இன்று முதல் மரண தண்டனை

விபரங்கள்>>>https://bit.ly/3VjeE5y

20/11/2022

நான் இன்றைய தினம் (20.11.2022) #வசந்தம் #வானொலியில் #சட்டம் என்ற விசேட நிகழ்ச்சியில் பங்கு பற்றி இலங்கையில் போதைப் பொருள் மற்றும் அது தொடர்பான சட்டம் தொடர்பில் நேர்காணல் ஒன்றினை வழங்கியுள்ளேன்.

நிகழ்ச்சி : சட்டம் (இது யாவர்க்கும் புகலிடம்)
நேரம் : காலை 8.00 - 9.00
நாள் : ஞாயிற்றுக்கிழமை

இதனை வனொலியில் கேட்டவர்கள் உங்கள் கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்கலாம்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிர்வாகம் மற்றும் இந்த சட்டம் நிகழ்ச்சி தொகுப்பாளர் RJ Darwin அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

இது போன்ற நிகழ்ச்சிகள் வானொலிகளில் ஒளிபரப்பு செய்வது சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதும் இன்றைய நாட்களில் மிகவும் தேவையானதும் ஒன்று. அந்த வகையில் வசந்தம் வானொலிக்கும் அதன் நிர்வாகத்திற்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.

சட்டத்தரணி குமாரசிங்கம் கம்ஷன் Kumarasingam Kamsan Kamsan Kumarasingam

03/11/2022

வெளிநாட்டவர்கள் - இலங்கையர்கள் இடையேயான திருமண பதிவுகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்

Read More >>> https://bit.ly/3sVcFbC

29/10/2022

நேற்று இடம்பெற்ற சாகித்ய விருதுகள் விழா - 2022 இல் சிறந்த நாவலுக்கான சாகித்ய விருதினை பெற எழுத்தாளர் சிவ ஆரூரன் அவர்கள் சிறையில் இருந்து காவல்துறை பாதுகாப்புடன் வருகைதந்து விருதினை பெற்றுக் கொண்டார்.

ஒரு நூலகம் திறந்தால் ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படும் என்ற கூற்றுக்கு துணையாக சிறைச்சாலையிலிருந்து கொண்டு நூலகங்களை நிரப்பும் பணியை செய்யும் ஒரு சிறந்த படைப்பாளி

விமர்சகர்கள் கண்களில் படாத முதன்மை நிலை படைப்பாளி - சிவ.ஆரூரன்
யார் இந்த சிவ.ஆரூரன் ?

சிறை கம்பிகளுக்கு பின்னால் வாழ்ந்து கொண்டு தமிழ் மீதான அளவற்ற பிடிப்பு காரணமாக கிடைக்கும் நேரத்தை பொன்னாகிக் கொண்டிருக்கும் அற்புத பிறவி தான் ஆரூரன். கல்வியில் பொறியியலாளர். இனப்பற்று கொண்டவர். இத்தனையும் இவர் தனது 42 வயது வயதிற்குள் சாதித்தவை.

1. யாழிசை - நாவல் - சாகித்ய விருது - முதலிடம்
2. யாவரும் கேளிர்- நாவல் - சாகித்ய விருது - சான்றிதழ்
3. வலசைப்பறவைகள் - நாவல் - சாகித்ய விருது - சான்றிதழ் (ஜீவநதி வெளியீடு)
4. The innocent victims - நாவல் (ஜீவநதி வெளியீடு)
5. ஊமை மோகம் - நாவல் - வடமாகாண சிறந்த நாவல் - முதலிடம் (ஜீவநதி வெளியீடு)
6. பூமாஞ்சோலை - சிறுகதை (ஜீவநதி வெளியீடு)
7. ஆதுரசாலை - நாவல் - சாகித்ய விருது - முதலிடம் - வடமாகாண சிறந்த நாவல் - முதலிடம் (ஜீவநதி வெளியீடு)
உதயணன் விருது இருதடவை

இவர் ஒரு பிரமிப்பூட்டும் எழுதும் அனைத்துக்கும் விருது பெறும் திறன் கொண்ட படைப்பாளி.

இவ்வாறான பல படைப்பாளிகள் விமர்சகர்கள் கண்களுக்கு தெரியாமல் போவது அவர்கள் விமர்சனம் தொடர்பான சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. எமக்கு பிடித்தவர்களை கொண்டாடும் விமர்சனங்களே இன்று வெளியாகி வருகின்றன.

அமைதியான முறையில் இலக்கியம் படைத்து வரும் ஆரூரன் போன்ற இலக்கிய வாதிகள் கண்டும் காணாமல் விடப்படுகிறார்கள். ஆனால் ஆரூரன் போன்ற செயற்பாட்டு வீரர்களுக்கு இது பற்றி எந்த கவலையும் இல்லை. அவர்கள் தம்மால் முடிந்த தமிழ் இலக்கிய பணியை ஆற்றுகிறார்கள்.
ஆனால் நடு நிலை விமர்சகர்கள் ஒரே படைப்பாளர்களை மாத்திரம் பிரஸ்தாபிக்காமல் இவர்களையும் படிக்க வேண்டும்.

ஆரூரனின் அவர்களின் வெளிவர உள்ள நூல்கள்
01. சிறுகதை தொகுப்பு
02. ஹைக்கூ தொகுப்பு
03. மகாபாரதம் ( நினைக்க முடியாத பிரமாண்ட படைப்பு )

Copy from Bharaneetharan Kalamany

Want your public figure to be the top-listed Public Figure in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Colombo