Hello FM
Hello FM is the Largest Network of Private FM Radio Stations in Tamil Nadu and Puducherry.
07/06/2026
இந்த வார்த்தை ரொம்ப சின்னது… ஆனா அதை கேட்குறதுக்கும், சொல்லுறதுக்கும், ஏத்துக்குறதுக்கும்... பெரிய மனசு வேணும்.
அது ஒரு கல் மாதிரி. அடுத்தவங்க தூக்கி எறிஞ்ச கல்ல, நாம ஏன் தோள்ல சுமந்துட்டு நடக்கணும்?? அதனால மன்னிச்சுடலாம்.
07/06/2026
Sales துறையில Shine பண்ண நீங்க Ready-யா ??
நம்ம நாகர்கோவில்ல விரைவில் துவங்கப்படவுள்ள, தமிழகத்தின் No.1 FM Radioவான ஹலோ FMக்கு Vibrant ஆன Sales Executives தேவை.
இதோ வந்தாச்சு ஒரு superb வாய்ப்பு!
நம்ம நாகர்கோவில்ல விரைவில் துவங்கப்படவுள்ள, தமிழகத்தின் No.1 FM Radioவான ஹலோ FMன்
அடுத்த சூப்பர்ஸ்டார் RJவாக நீங்க ரெடியா ???
06/06/2026
20 வருடங்களாக தமிழகம் மற்றும் புதுவையில், 10 நகரங்களில் மக்களோடு தினமும் உறவாடி, பல்வேறு தகவல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி, தமிழகத்தின் நம்பர் ஒன் பண்பலை வானொலியாக கோலோச்சும் ஹலோ FM, விரைவில், புதிதாக 11 நகரங்களில் தனது ஒலிபரப்பை விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் 21 நகரங்களில் ஒலிபரப்பாகும், உலகின் மிகப்பெரும் தமிழ் பண்பலை வானொலியாக ஹலோ எப்.எம் உருவெடுக்கிறது. ஹலோ FMன் இந்த மகத்தான வளர்ச்சி பற்றிய சிறப்பு ஹலோ தமிழா நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஒலிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 21 நகரங்களில் ஹலோ எப்.எம் விரிவாக்கம், எந்தெந்த 11 நகரங்களில் புதிதாக ஒலிபரப்பு துவங்கப்படுகிறது, சிறு நகரங்களின் வணிகத்தை விரிவுபடுத்த ஹலோ எப்.எம் பண்பலை எவ்வாறு உடன்நிற்கிறது, இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்புகள் என்பது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசப்படும். மேலும் தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஆண்டாள் பிரியதர்ஷினி, வானொலி முன்னோடிகள் சவித்ரா ராஜாராம், இளங்கோ குமணன் ஆகியோர் கலந்துகொண்டு ஹலோ எப்.எம்மிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர். .
பசுபிக் பெருங்கடலில் உருவாக உள்ள எல்-நினோ நிகழ்வு என்பது என்ன? இந்த நிகழ்வால் காலநிலை மாற்றம் குறித்து நாம் விழிப்புணர்வடைய வேண்டியது என்ன ? என்பது பற்றி மாலை 6 மணிக்கு இடம்பெறும் தாறுமாறு தர்பார் நிகழ்ச்சியில் விரிவாகப் பேசப்படுகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன், வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர், பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர். இரவு 9 மணிக்கு இடம்பெறும் கதையாடல்’ நிகழ்ச்சியில் ‘’பாரம் சுமப்பவர்கள்’’’ என்ற சிறுகதை இடம்பெறுகிறது. இது குறித்து கதையின் ஆசிரியர் ஆ.ஆனந்தன்
தனது கருத்துக்களை கூறவுள்ளார். கதையின் சிறுபகுதி ஒன்று நாடகமாகவும் ஒலிபரப்பாகும். நாளை மதியம் 12 மணிக்கு ‘சண்டே கிராமபோன்’ நிகழ்ச்சியில் பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் சாந்தாமணி தனது அனுபவங்களைப் பகிர்கிறார்.
04/06/2026
Remembering S.P. Balasubrahmanyam (SPB) on his birth anniversary.
02/06/2026
Our Hearty Birthday wishes to Maestro Ilayaraja & Mani Ratnam!
31/05/2026
சில சந்தோஷங்கள் கதவு தட்டாது… வாசல் தேடி தானா வரும். யாருக்குத் தெரியும்…நாளைக்கு நம்ம வாழ்க்கைய மாத்துற ஒரு காரணம், அதே வாசல் வழியா உள்ளே வரலாம்… இல்லையா??
30/05/2026
ஹலோ எப்.எம்மில் கடந்த வியாழக்கிழமை (21.05.2026) ஒலிபரப்பான ‘’சொல்லிஅடி’’ நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதில் இருந்தும் பங்கேற்ற நேயர்கள் 26 ஆயிரம் ரூபாய் வென்றனர். வெற்றி பெற்றவர்களில் சென்னையை சேர்ந்த நேயருக்கு பின்னணிப் பாடகி மாலதி லக்ஷ்மன் பரிசு வழங்கினார்.
இது வரை ஒலிபரப்பான 14 ‘’சொல்லி அடி’’ நிகழ்ச்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நேயர்கள் வெற்றி பெற்றதுடன் 4 லட்சத்து 87 ஆயிரம் ரூபாயை பரிசாக பெற்றுள்ளனர்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Hello FM, Malar Publications Ltd. No: 88 EVR Periyar Salai
Chennai
600084.
Opening Hours
| Monday | 9:30am - 6:30pm |
| Tuesday | 9:30am - 6:30pm |
| Wednesday | 9:30am - 6:30pm |
| Thursday | 9:30am - 6:30pm |
| Friday | 9:30am - 6:30pm |
| Saturday | 9:30am - 1am |