Platform For The Resource.
We want to make resources person . And this platform give to them to prove thay are abilities and develop their ideas and skills.
Definitely one day they will become a entrepreneur. □ We gave Counselling and psychological support.
□ Energy healing treatment.
□ Training.
□ Health Advice.
□ Relationship Solutions.
□ Spritual Guidance.
□ Skill Development Programme and Training.
30/11/2024
வட மாகாண பெண் தொழில்முனைவோருக்கான வலுவூட்டல்!
நீங்கள் தொடக்க மற்றும், சிறிய அல்லது நடுத்தர அளவிலான வணிக உரிமையாளராக இருந்தால், Empower பெண்கள் உங்களுக்கானது.
GRIT திட்டத்தின் கீழ் LIIN மூலம் ஆரம்பிக்கப்பட்ட, Global Affairs Canada மற்றும் WUSC Sri Lanka மூலம் அனுசரனையுடனான, இந்த திட்டம் பெண்கள் தலைமையிலான வணிக வளர்ச்சியை மேம்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் உள்ள பெண்கள் கற்கவும், வளரவும், வணிகத்தை விரிவுபடுத்தவும் மற்றும் தாக்க முதலீட்டினைப் பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்த நாங்கள் இங்கு வந்துள்ளோம். உங்கள் தொழில்முனைவோர் பயணத்தை நாங்கள் எவ்வாறு ஆதரிப்போம் என்பது குறித்த அறிவிப்புகளுக்காக காத்திருங்கள்!
15/10/2024
We are planning to conduct his workshop in Jaffna. Anyone intrest to participate in this workshop please let me know. Thank you
Encounter - Prana Violet Healing Contributors are advised to keep their comments respectful and according to the YouTube guidelines.We do not support offensive and malicious comments, and th...
28/08/2022
07/08/2022
உங்களின் கனவு வீட்டை கட்டுவதற்கு முன் நீங்கள் கட்டப்போகும் வீட்டின் அடித்தளத்தில் கவனம் வையுங்கள்.
இப்பூமியில் உள்ள அனைத்தையும் இரண்டு சொல் இணைக்கும். ஒன்று உயிர் உள்ளது மற்றயது உயிர் அற்றது.
ஆகவே உயிர் என்ற அடிப்படையில் தான் இவ் உலகத்தை நாம் புரிந்து கொள்ள ஆரம்பிக்கின்றோம்.
அதன் பின் பல்லாயிரம் பிரிவுகளாய் அதை நம் அறிவிற்கு ஏற்றால் போல் பாகுபடுத்தலாம்.அவை எல்லாம் மனம் சார்ந்த விடயங்கள் மற்றும் புரிதல் சார்ந்த விடயங்கள்.
எந்த ஒரு விடயத்தை நாம் தொடங்குவதற்கு முன்னும் அதன் அடிநாதத்தை அதாவது அதன் அடிப்படை கொள்கை அல்லது அதன் அடிப்படை தன்மை புரிந்து அதை செய்வோமாயின் அதை மிகச் சரியாகவும் அழகாகவும் செய்யலாம்.
வாழ்கை என்பதன் அடிநாதம் உயிர். அதை சரியாக புரிந்து கொள்ளாமல். அதை சரியாக மேம்படுத்தாமல் உங்கள் வாழ்வில் தன்நிறைவு அடைவது மிகவும் கடினம்.
உதாரணமாக புதிதாக நீங்கள் ஏதேனும் வாங்கினால் அதனுடன் அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விரிவாக புரிந்து கொள்ள user manual என்ற ஒரு குறிப்பையும் பெற்றுக்கொள்வீர்கள். ஆனால் நீங்கள் அந்த குறிப்பை படித்து தெரிந்து கொண்டும் அப்பொருளை கையாளலாம் அல்லது அதை உங்கள் புத்திக்கு எட்டிய போல் அதை பாவித்து பார்த்தும் அனுபவத்தின் மூலமும் புரிந்து கொள்ளலாம். இரண்டாவது முறையில் அதை புரிந்து கொள்வதற்கான சாத்தியக்கூறை விட புரியாமல் போவதற்கான சாத்தியக்கூறே அதிகம். ஏனேனில் அப் பொருளை உருவாக்கியவனுக்கே அப்பொருளின் உண்மையான நோக்கமும் அதை எவ்வாறு வினைத்திறாக பயன்படுத்தலாம் என்றும் தெரியும்.
நம் வாழ்க்கையில் நமக்கு கொடுக்கப்பட்ட இவ் உடலையும் மனத்தையும் புரிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டது தான் இந்த உயிர். இது தான் வாழ்வின் அடித்தளம் மற்றும் இதுதான் வாழ்வை சரியாக வாழ்வதற்கான குறிப்பும்.
எவன் ஒருவன் அதை சரியாக புரிந்து தெரிந்து வாழ்க்கை வாழ ஆரம்பிக்கின்றானோ அவனால் நிறைவாக வாழமுடியும்.
அப்படிப்பட்ட உயிரை புரிந்து கொள்வற்காக நாம் பயன்படுத்தும் உபகரணமே ஆன்மீகம். ஆன்மீகத்தை வெளியில் தேடவோ அல்லது பிறரால் போதிக்கவோ முடியாது ஏனெனில் உனக்குள் இருப்பதை உன்னால் மட்டுமே அனுகமுடியும். ஆனால் அதை அணுகுவதற்கான வழிமுறைகளையும் வழிகாட்டுதலையும் பெற்றுக்கொள்ளலாம்.
வாழ்க்கையை சிறந்த முறையில் வாழ்வதற்கு அடித்தளமாக இருக்கும் உயிரை புரிந்து கொண்டு அதன் படி வாழ்க்கையை நோய் அற்ற குறைவற்ற திருப்திகரமான வாழ்கை வாழ்வதற்கு இவ் உயிரை புரிந்து கொள்ள உருவாக்கப்பட்ட வழி முறைகளே யோகா , மூச்சுப்பயிற்சி , தியானம் .
இவற்றை நாம் ஏன் செய்கின்றோம் என்ற தெளிவுடன் செயற்படுவோமாயின் நம்மால் நம்மை புரிந்து கொள்வது எளிது.
இவற்றை அனைவரும் ஒன்றாக சேர்ந்து செய்வதற்கு உருவாக்கப்பட்ட இடமே வழிபாட்டுத்தலங்கள். அதை முறையாக பயன்படுத்த நாம் மறந்துவிட்டோம்.
அதனால் தான் நம் வாழ்வும் ஓர் சீர் அற்ற தன்மையில் காணப்படுகின்றது. முதலில் உங்கள் அடித்தளத்தை சரி செய்யுங்கள் . உங்கள் கனவு வீடு நல்ல முறையில் உருவாகும்.
26/07/2022
நீங்களும் கடவுளாகலாம்!
மனித வாழ்வு , இதை பற்றி பலபேருக்கு பல வகையான புரிதல் உண்டு. சிலர் பெண்களின் மனதை போல் புரிந்து கொள்ள முடியாத புதிராக அதை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள் ,சிலர் தமக்கு எட்டிய அறிவுப்படி ஒரு நம்பிக்கையிலான நடைமுறையை வகுத்து அதன் படி வாழ்கின்றனர்.
ஒன்றை பற்றி சிந்திக்கவோ அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தவோ ஏன் தேவை எமக்கு ஏற்படுகின்றது.
நாம் சிந்திக்காமல் இருப்பதால் இயக்கம் நின்றுவிடுமா ? அல்லது சிந்திப்பதால் இயக்கம் வேகமாக இயங்க ஆரம்பிக்குமா ? இரண்டும் கிடையாது .
சிந்தித்து செயற்படுபவர்கள் அவர்கள் வாழ்வு அவர்கள் கையில் என எண்ணி வாழ்வார்கள் , சிந்தியாதவர்களோ அவர்களின் வாழ்க்கையை பிறரிடமோ விதியிடமோ கடவுளிடமோ அல்லது தற்செயலிடமோ விட்டுவிடுவார்கள்.
வாழ்க்கைக்கும் சிந்தனைக்கும் மனித வாழ்வில் முக்கிய பங்கு உள்ளது. அனைவருக்கும் தெரியும் பிறந்தவர்கள் எல்லோரும் ஒரு நாள் இறப்பார்கள் என்று அவ்வாறு இருக்கும் பொழுது ஒரு மனிதன் எதற்காக சிந்திக்க வேண்டும் தத்தம் வேலைகளை பார்த்துகொண்டு இருந்துவிடலாம் அல்லவா ? , உண்மையை சொல்லபோனால் உலகின் 80% மான மனிதர்கள் இவ்வாறு தான் உள்ளனர். 20% மானவர்கள் மட்டுமே சிந்திக்கின்றனர். அவர்கள் அவர்களது வாழ்க்கையை மட்டும் அன்றி பிறரது வாழ்க்கை பற்றியும் சிந்தித்தவர்கள். அவர்களை மீத முள்ள 80% மானோர் தலைவர்கள் சிந்தனையாளர்கள் அறிவாளிகள் தத்துவஞானிகள் என்று இன்னும் பல பட்டங்களை கொடுத்து உள்ளார்கள்.
ஏன் அவர்களை அவ்வாறு அழைக்கிறார்கள் என்றால் தாங்கள் பட வேண்டிய கஸ்டங்களையும் துன்பங்களையும் அவமானங்களையும் அவர்கள் வாங்கிக்கொண்டு அவர்களின் சிந்தனையின் மூலம் இவர்கள் சிந்திக்காமல் சொகுசாக வாழ்வதற்கு.
அந்த 20% மானவர்களை பற்றி பேச பலர் உள்ளனர் ஆனால் இந்த 80% மானவரை பற்றி பேச யாரும் இல்லை. காரணம் இவர்கள் உயிர்அற்றவர்கள் அதாவது மண்ணில் இருந்து வந்தவர்கள் மனிதர்கள் என நாம் கூறுவோம் இவர்கள் மண்ணின் பிற நல்ல குணங்களை எல்லாம் விட்டு விட்டு அசைவற்று இருக்கும் குணத்தை மட்டும் கொண்டவர்கள் போல கருதப்படுகின்றனர்.
அவ்வாறு இருப்பதில் என்ன தவறு கஷ்டப்படமால் மகிழ்சியாக தாம் உண்டு தங்கள் வேலை உண்டு என இருப்து தவறா ? நாங்கள் கொள்ளை அடித்தோமா கொலை செய்தோமா என அவர்கள் கேட்க கூடும்.
அப்படி கேட்பவர்களுக்கு ஒன்று சரியாக புரியவில்லை கொள்ளை அடிப்பவர்களும் கொலை செய்பவர்கள் கூட உங்கள் 80 % குள் தான் வருவார்கள். அவர்கள் உருவாகவில்லை உருவாக்கப்பட்டுள்ளனர்.
இங்கு 80% மானவர்கள் தவறானவர்கள் என்ற கருத்தை முன் வைக்கவில்லை அவர்கள் தவறவிட்ட சில விடயங்கள் தான் அவர்களையும் அவர்கள் வருங்கால வாழ்வையும் கடினமான பாதையை நோக்கி நகர்ந்து செல்கிறது . யார் யாரோ அவர்களை ஏமாற்றுகிறார்கள் ஏமாற்றுபவர்கள் இன்னோருவரிடம் ஏமாறுகின்றார் இதனால் மனித நற்குணங்கள் அழிந்து பயமும் சந்தேகமும் சோர்வும் மட்டுமே அவர்களிடம் எஞ்சி உள்ளது இது மிகவும் வருத்தத்திற்கு ஒன்றான விடயமாக உள்ளது.
நமது முன்னோர்கள் பெரியோர்கள் மற்றும் பலர் பார்த்து பார்த்து கட்டிய வீட்டை நாங்கள் இடித்து தரை மட்டம் செய்வது போல உள்ளது .
இதற்கான முடிவுரையை நாம் ஒவ்வொருவரும் எழுதுவோம். அதற்கான முதல் படி முதல் செயல் எங்களின் பலமான ஆயுதமாகிய சிந்தனை .
நாம் முதலில் நம்மை பற்றி சிந்திப்போம். நமது உடல் , உளம் , பொருளாதாரம், சமூக உறவு , நல்வாழ்வு மற்றும் சமாதானம் நம்முள் உண்டா என சிந்திப்போம் அதன் பின் நமது குடும்பத்தில் உண்டா என பார்போம் அதன் பின் சமுதாயத்தில் பார்ப்போம் மீதமுள்ளது தாமாக நன்மை பெறும்.
நீங்கள் இவ்வாறு உங்கள் வாழ்க்கை பற்றி சிந்திக்கும் போது அதில் ஏதாவது குறைகள் இருக்குமேயானால் அதை சரி செய்வதற்கான முயற்சி எடுங்கள். விடை இல்லாத கேள்வி இங்கு இல்லை அதனால் விடை கிடைக்கும் வரை ஓடுங்ஙள். அப் பொறுப்பை பிறரிடம் விட்டு விடாதீர்கள் உங்கள் வாழ்க்கை மேல் நீங்கள் முழுப் பொறுப்பையும் நீங்களே எடுங்கள். நமக்கு ஏற்பட்ட பிரட்சனைக்கு முக்கிய காரணமே பொறுப்பை பிறர் மேல் விட்டது தான்.
சற்று சிந்தித்து பாருங்கள் நீங்கள் வாழ்நாளில் உபயோகிக்கும் பொருளில் இருந்து செய்கின்ற வேலை படிக்கின்ற படிப்பு அனைத்தும் உங்களின் சிந்தனையால் அல்லது உங்களின் பொறுப்பால் நடைபெற்றதா ? அது அனைத்தும் உங்கள் மேல் திணிக்கப்பட்டதாக இருக்கும் அல்லது பழக்கப்படுத்தப்பட்டதாக இருக்கும். நமக்கு என்ன தேவை என்பதை பிறர் முடிவு செய்வது மிகப்பெரிய கொடுமை. பல்லு முளைத்த குழந்தைக்கு பால்கொழுக்கட்டை உடன் சேர்த்து பல பொருட்களை போட்டு அதில் குழந்தை எதை எடுக்கின்றது என பார்ப்பதை போல பிறர் எமக்கு சொற்ப தெரிவை தந்து அதை தெரிவு செய்வதால் வரும் மாய மகிழ்ச்சியை உண்மை என நம்ப வைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கின்றோம். இதுவே எம் நாட்டின் தற்போதய நிலைக்கு காரணமும் கூட.
ஆகவே இனிமேல் உங்கள் மீதும் மேலும் உங்களை படைத்த அந்த சக்தி மேலும் மட்டும் நம்பிக்கை வைத்து செயற்படுங்கள். நன்மை உருவாகும்.
நீங்களும் கடவுளாகலாம்!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Jaffna
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |