Venkatesan
என்னுடைய 15 வது வயதில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டேன்
27/05/2026
ஜடா ஸ்கடர் அவர்களின் 66வது நினைவுநாள் 24.05.2026 அன்று
மகளிருக்கான முதல் மருத்துவமனை!
ஒரு மருத்துவச்சுடரின் மகத்தான சரிதம்:
அவள் பெயர் ஐடா ஸ்கேடர், அமெரிக்க பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மிஷனரி மருத்துவர்கள்.
அக்காலத்தில் இந்தியர்களின் அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்தவர்கள். அவர்களோடு 14 வயது நிரம்பிய ஐடாவும் இந்தியா வந்தாள். வந்த இரு மாதங்களில் அவள் அன்னை அமெரிக்கா திரும்பிவிட்டார்.
தந்தையுடன் வேலூரில் விடுமுறையைக் கழித்துகொண்டிருந்தாள் அந்த சிறுமி. அச்சமயத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் அவளைப் புரட்டிப் போட்டன.
என்ன சம்பவங்கள் ?
ஒரு நள்ளிரவில் அவரகள் வீட்டுக் கதவைத் தட்டுகின்றான் ஒரு பிராமணன். அவன் கண்கள் டாக்டரம்மாவைத் தேடுகின்றன. ஐடாவின் தகப்பனார் "என்ன" என்கின்றார்? "என் மனைவிக்குப் பிரசவம். டாக்டரம்மாவை அனுப்ப முடியுமா?"
"இல்லை ..அவள் அமெரிக்கா சென்றுவிட்டாள. நான் வரட்டுமா ?" என்கின்றார் அவர்.
"இல்லை அய்யா, எங்கள் சமூகத்தில் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டும் . கட்டுப்பாடு அது. என்னால் மீற முடியாது "என கண்களைத் துடைத்துகொண்டே செல்கின்றார்.
மறுநாள் அந்த கர்ப்பிணியின் இறந்த உடலை ஐடாவின் வீட்டின் முன்னால் எடுத்துச் செல்கின்றார்கள். குற்ற உணர்வினால் அத் தந்தை அழ, தன்னையும் அறியாமல் ஐடாவும் அழுகின்றாள்.
இரு நாட்கள் கழித்து ஓர் இஸ்லாமியருக்கு அதே தேவை. ஆனால் அதே கட்டுப்பாடு. டாக்டரம்மா இல்லாததால் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியேறுகி்றார் அந்த இஸ்லாமியக் கணவர்.
மறுநாள் அதே ஊர்வலம்.
மனதால் வெடித்து அழுதாள் ஐடா, 'என்ன தேசமிது? பெண்களைப் படிக்க வைக்கவும் மாட்டார்களாம், ஆனால் பெண்ணுக்குப் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம் . கொடுமை ! '.
இதற்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது.
நிச்சயம் இங்கு மகளிரைப் படிக்க வைக்க முடியாது, நாமே டாக்டராகி இவர்களோடு தங்கிவிட்டால்?
அந்த வைராக்கியம் அன்றே வந்தது, அமெரிக்கா சென்று படித்து டாக்டரனாள், பெரும் வேலைவாய்ப்பு வந்தாலும் அவள் கண்களில் அந்த இரு ஊர்வலங்களும் வந்து அவள் வைராக்கியத்தை அதிகரித்துகொண்டே இருந்தன.
திரும்பி அதே வேலூருக்கு வந்தாள். இனி ஒரு கர்ப்பிணியினை சாக விடமாட்டேன் என்று சொல்லி ஒரு மருத்துவனையைத் தொடங்கினாள்.
இந்தியாவில் மகளிருக்கான முதல் மருத்துமனையாக அதுதான் உதித்தது.
பெண்கள் தயக்கமின்றி அவளிடம் சிகிச்சைக்கு வந்தனர். எந்த மதக் கட்டுப்பாடுகளும் அதற்குத் தடையாக இல்லை.
இந்நாட்டுப் பெண்களைப் படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்து வந்து இப்பெண்களைக் காப்பாற்றுவேன் என சூளுரைத்து அதை செய்தும் காட்டினாள் .
அவள் பெண்ணுரிமை பேசவில்லை, கொடி பிடிக்கவில்லை, புரட்சி செய்யவில்லை மாறாக தன்னால் அந்தக்கால யதார்த்த வாழ்விற்கு எதைச் செய்ய முடியுமோ அதை செய்தாள்
அதற்கு அவள் கொடுத்த விலை அவளின் சொகுசான வாழ்வு.
நிச்சயம் தனி ஆளாகத்தான் போராடினாள், பின்பே பல சேவை மருத்துவர்கள் அவரோடு இணைந்தனர்.
அவள் தனியே ஏற்றிய மெழுகுவர்த்திதான் இன்று மிகப் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது -
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக !
உலகின் மிகத் தரமான மருத்துவமனை என அதற்கு இன்றும் பெயர் !
ஏராளமான மருத்துவ மனைகள் இன்று வந்துவிட்ட போதிலும் , இப்போதும் மிகப் பெரியதும், சேவை மனப்பான்மையோடு மிகத் தரமான சிகிச்சை கொடுப்பதும் வேலூர் சிஎம்சி மருத்துவமனையே !
ஐடா யார்? அவருக்கும் இம் மக்களுக்கும் என்ன சம்பந்தம்?
நம் மக்களுக்காக அழுதிருக்கிறார், நம் மக்களின் சாவினைத் தடுக்க டாக்டராகி வந்து இங்கு தன் வாழ்வினை அர்ப்பணித்திருக்கிறார்.
அந்த வணங்கத் தக்க பெண்மணியின் உழைப்பில் உருவான அந்த மருத்துவமனைதான் இன்று 100 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடுகின்றது !
இந்த நல்ல தருணத்தில் ஐடா என்ற அந்த மகத்தான மருத்துவச் சுடருக்கு நாமும் நமது இதய பூர்வமான அஞ்சலிகளைச் செலுத்துவோம்
Source
திருநெல்வேலி கிறிஸ்தவ வரலாற்று சங்கம்
26/05/2026
இன்று (மே 26) G U போப்
, 19-ஆம் நூற்றாண்டில் கல்வி மற்றும் தமிழ் மொழிக்கு அரும்பணியாற்றிய முன்னோடிகளில் ஒருவரான ஜி.யு. போப் (Rev. G.U. Pope) அவர்களின் வாழ்வில் மே 26-ஆம் தேதி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும்.
அவர் தனது வாழ்நாளின் இறுதிப் பிரசங்கத்தை (Last Sermon) 1907-ஆம் ஆண்டு மே 26 அன்று
தான் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டில் வழங்கினார்.
பிராந்திய மொழிகளின் வீழ்ச்சிக்கும், பிற மொழிகளின் ஆதிக்கத்திற்கும் முந்தைய மன்னர்கள் காலமும், பின் வந்த ஆக்கிரமிப்பும் முக்கிய காரணம் என்ற வரலாற்று யதார்த்தத்தின் பின்னணியில் பார்க்கும் போது, காலனி ஆதிக்க காலத்தில் வந்த சில மிஷனரிகள் தமிழ் மொழியின் செழுமையைக் கண்டு வியந்து, அதனை ஆராய்ந்து உலகறியச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு ஜி.யு. போப் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.
ஜி.யு. போப் (Rev. G.U. Pope)
பிறப்பு: 24 ஏப்ரல் 1820
இறப்பு: 11 பிப்ரவரி 1908
தமிழக வருகை:
தனது 19-வது வயதில் (1839) தென்னிந்தியாவிற்கு வந்து, தூத்துக்குடி அருகிலுள்ள சாயர்புரத்தில் தனது மிஷனரிப் பணியைத் தொடங்கினார்.
முக்கியப் பணிகள்
சமயப் பணியாற்ற வந்த மிஷனரியான இவர் தமிழ் மொழி பால் கொண்ட பற்றின் காரணமாக தமிழ் மொழி உலக மக்களிடம் கொண்டு செல்லும் மிகப்பெரும் தொண்டாற்றினார் .
இலக்கியப் பணி:
திருக்குறள், நாலடியார், மற்றும் திருவாசகம் ஆகிய செவ்வியல் தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதன் மூலம் பழந்தமிழ் இலக்கியங்களின் பெருமையையும், அதன் தத்துவார்த்த ஆழத்தையும் உலக அரங்கிற்கு கொண்டு சென்றார்.
கல்விப்பணி
சாயர்புரம், தஞ்சாவூர் மற்றும் உதகமண்டலம் ஆகிய இடங்களில் பள்ளிகளை நிறுவி, நவீன கல்வியை வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்தார். பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியின் முதல்வராகவும் பணியாற்றினார்.
தமிழ் மொழியின் மீதும், இலக்கியங்களின் மீதும் அவர் கொண்டிருந்த ஆழமான ஈடுபாடு, ஒரு அயல்நாட்டவர் நமது மொழியைக் கற்று அதில் எப்படிச் சிறந்து விளங்க முடியும் என்பதற்கு இன்றும் சிறந்த சான்றாக உள்ளது.
கேரளம் மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்ட #திரு_சதீஷன் அவர்களின் இயேசு கிறிஸ்துவை பற்றிய தெளிவான பார்வை.
"நான் மதங்களை கடந்து இயேசுகிறிஸ்துவை என்னுடைய நண்பனாக பார்க்கிறேன். என்னுடைய எல்லா இக்கட்டான நிகழ்வுகளையும் அவரோடு பகிர்ந்து கொள்ள முடியும்.
அவரை நான் சத்தியம் என்று அறிகிறேன். எனக்கு பல நேரங்களிலும் 121 சங்கீதம் மிகவும் ஆறுதல் அளிக்கும் அற்புதமான வசனங்களாகும்"
#ஒரு_கிறிஸ்தவர் ........ முடியல சார் உங்க கற்பனை... என்னங்க சார் உங்க பிரச்சனை.... இப்படி புலம்பரீங்க ...
மதச்சார்பற்ற இந்தியாவில் ‘மதவெறி ஊசி’ போடுவதை நிறுத்துங்கள்!
முடியல சார் உங்கள் கற்பனை! எதை எதையோ கோர்த்து ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்க எவ்வளவு மெனக்கெடுகிறீர்கள்? மக்கள் உங்கள் பேச்சைக் கேட்டால் மதவெறி ஆதங்கத்தில் புலம்புகிறீர்கள் என்பதை புரிந்துகொள்வார்கள்.
1. ஜெகன்மோகன் ரெட்டி குறித்த பொய்.
ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குப் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்ததும், சாரதா பீட சங்கராச்சாரியாரைச் சந்தித்து ஆசி பெற்றதும் வீடியோ ஆதாரங்களுடன் செய்திகளில் வந்தவை.
அவர் காலத்தில் 53 லட்சம்பேர் மதம் மாற்றிக் கொண்டதாக நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய்.
கிறிஸ்தவர் என்றால் யார்?
"கிறிஸ்துவை உடையவன்" என்று அர்த்தம். சரிதான். தமிழ்நாட்டில் நீங்கள் குறிப்பிடும் தலைவர்கள் (விஜய் அல்லது உதயநிதி) தங்களை ஒரு மதத்திற்குள் மட்டும் சுருக்கிக் கொள்ளவில்லை. ஒருவர் "எல்லாமே சாமி" என்கிறார், மற்றொருவர் "சாமியே இல்லை" (பகுத்தறிவு) என்கிறார். இதில் எங்கே வந்தது 'கிறிஸ்தவ ஈக்கோ சிஸ்டம்'? உங்கள் அரசியலுக்காக அவர்களைக் கட்டாயப்படுத்தி ஒரு மத முத்திரை குத்துவது ஏன்?
உயர் பதவிகள் யாருக்குச் சொந்தம்?
ஒரு கிறிஸ்தவர் அல்லது பிற மதத்தவர் உயர் பதவிக்கு வருவது உங்களுக்கு ஏன் இவ்வளவு எரிச்சலைத் தருகிறது? இது மதச்சார்பற்ற இந்தியா. அரசியலமைப்புச் சட்டத்தின்படி எந்த ஒரு குடிமகனும், எந்தச் சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், மக்கள் ஆதரவு இருந்தால் உயர் பதவியை அடையலாம். அதைத் தடுப்பதற்கு அல்லது விமர்சிப்பதற்கு நீங்கள் யார்?
மக்களை ஏமாற்றாதீர்கள்:
சிறுபான்மையினர் அரசியலுக்கு வருவதையே ஏதோ சதித் திட்டம் போலச் சித்தரித்து, மக்களிடையே மதவெறி ஊசி போடப் பார்க்கிறீர்கள். இந்திய ஜனநாயகத்தில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அவர்களே தலைவர்கள்.
மதத்தை வைத்து அரசியல் செய்யாமல், மக்கள் நலனைப் பேசி அரசியல் செய்யுங்கள் சார்!
தமிழ்நாட்டு சட்டசபையில் சபாநாயகர் JCD பிரபாகர் அவர்கள் வேதாகம மேற்கோள்களை குறிப்பிட்டார்...
12/05/2026
“இந்திய மாநிலங்களவையின் முதல் பெண் துணைத் தலைவர்: வயோலெட் ஆல்வா – ஓர் வரலாற்றுப் பயணம்!”
இந்திய அரசியல் வானில் பெண்கள் காலடி எடுத்து வைப்பதே பெரும் சவாலாக இருந்த காலகட்டத்தில், மாநிலங்களவையின் துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து, இந்திய ஜனநாயகத்தின் மாண்பைக் காத்த ஒரு பெண்மணி இருந்தார். அவர்தான் வயோலெட் ஆல்வா. (Violet Hari Alva). 1962-ல் அவர் அந்தப் பொறுப்பை ஏற்றபோது, அது வெறும் பதவி உயர்வு மட்டுமல்ல; இந்தியப் பெண்களின் அரசியல் அதிகாரத்திற்கான திறவுகோலாக அமைந்தது.
மைசூர் மண்ணிலிருந்து நாடாளுமன்றம் வரை...
ஏப்ரல் 24, 1908-ல் இன்றைய கர்நாடகாவின் மைசூர் மாகாணத்தில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார் வயோலெட். கல்வியே பெண்களுக்கு மறுக்கப்பட்ட காலத்தில், சென்னை மற்றும் மும்பையில் St. Xavier's College மற்றும் சட்டக் கல்வி நிறுவனங்களில் பயின்றார்.
சட்டம் என்பது குற்றவாளிகளைத் தண்டிக்க மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட பெண்களின் உரிமைகளை மீட்கும் கருவி என்பதையும் அவர் ஆழமாக நம்பினார்.
காந்தியப் பாதையில் ஓர் இளம் வீராங்கனை
விடுதலைப் போராட்டத் தீ நாடு முழுவதும் பரவியபோது, காந்தியச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட வயோலெட் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் துணிச்சலாகப் போராட்டக் களங்களில் நின்றார்.விடுதலைப் போராட்டத்தில் அவர் வெறும் ஆதரவாளராக மட்டுமல்ல:
க்விட் இந்தியா இயக்கத்தில் பங்கேற்றார்.
அதற்காக பிரிட்டிஷ் ஆட்சியால் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.
"பெண்கள் அடுப்படியைத் தாண்டி அரசியல் களத்திற்கு வர வேண்டும்" என்ற அவரது முழக்கம் அக்காலத்துப் பெண்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
பெட்டிச் செய்தி: சாதனையின் மைல்கல்!
1962 ஆம் ஆண்டு, இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை (Rajya Sabha) துணைத் தலைவராகப் பதவியேற்ற முதல் பெண்மணி வயோலெட் ஆல்வா ஆவார். அவரது நாடாளுமன்ற மேலாண்மைத் திறன் இன்றும் ஒரு பாடமாகப் போற்றப்படுகிறது.
இந்தியாவின் முக்கிய கிறிஸ்தவப் பெண் அரசியல் தலைவர்களில் ஒருவராகவும்,
தேசிய அளவில் உயர்ந்த பதவியை அடைந்த முதல் கத்தோலிக்கப் பெண்களில் ஒருவராகவும் குறிப்பிடுகின்றன.
பேனாவும் ஒரு போர்க்கருவியே!
அரசியல் மற்றும் சட்டப் பணிகளுக்கு இடையே இதழியலிலும் தனது முத்திரையைப் பதித்தார்.
அவர் தனது கணவர் Joachim Alva உடன் சேர்ந்து “Forum” என்ற இதழை நடத்தினார்.
அது வெறும் பெண்கள் இதழாக மட்டும் இல்லாமல்:
தேசியவாதம்,சமூக நீதி,அரசியல், விமர்சனம்,
பெண்கள் உரிமை
போன்ற கருத்துகளை வலியுறுத்திய ஒரு முக்கிய அறிவுசார் இதழாக இருந்தது. இவரது கூர்மையான எழுத்துக்கள் பல பெண்களைச் சிந்திக்கத் தூண்டின.
கண்ணியமான தலைமை
மாநிலங்களவையின் துணைத் தலைவராக அவர் பணியாற்றிய காலம் ‘பொற்காலம்’ என்றே சொல்லலாம். சபையில் காரசாரமான விவாதங்கள் நடக்கும்போது, மிக அமைதியாகவும் அதே சமயம் கண்டிப்புடனும் சபையை வழிநடத்துவதில் அவர் வல்லவர்.அவர் சபை நடைமுறைகளை மிகவும் ஒழுங்காக கையாள்ந்தவர்.
கட்சி வேறுபாடுகளை மீறி மரியாதை பெற்றவர்.
பெண்களும் உயர்ந்த அரசியல் நிர்வாகத் திறன் கொண்டவர்கள் என்பதை நிரூபித்தவர். சட்ட நுணுக்கங்களை அவர் கையாண்ட விதம் சக அரசியல் தலைவர்களிடையே அவருக்குப் பெரும் மரியாதையைப் பெற்றுத்தந்தது.
விழுமியங்களின் சங்கமம்
வயோலெட் ஆல்வாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் ஒரு முன்மாதிரியே. தனது கணவர் ஜோஆகிம் ஆல்வாவுடன் இணைந்து சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டார். அவரது செயல்பாடுகளில் பிரதிபலித்த மனித நேயம் மற்றும் சேவை மனப்பான்மை, அவர் வளர்ந்த பண்பாட்டுப் பின்னணியின் அடையாளமாகத் திகழ்ந்தது.
சவால்களைத் தகர்த்த சாதனைப் பெண்
ஆண் ஆதிக்க அரசியல் சூழல், சமூகக் கட்டுப்பாடுகள் எனப் பல தடைகளைத் தனது அறிவாற்றலால் கடந்தார். நவம்பர் 20, 1969-ல் அவர் மறைந்தாலும், இந்திய ஜனநாயகம் இருக்கும் வரை அவர் உருவாக்கிய பாதையும், அவரது பெயரும் நிலைத்திருக்கும்.
"“இந்திய ஜனநாயகத்தின் உயர்ந்த அரங்குகளில் பெண்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்ற கனவை, தனது வாழ்க்கையால் நனவாக்கியவர் வயோலெட் ஆல்வா.”
ச. வெங்கடேசன்
07/05/2026
திராவிட மொழியியலின் தந்தை என்று அழைக்கப்படும் இராபர்ட்டு கால்டுவெல் அவர்களின 212வது பிறந்த நாள் 07.05.2026
இளமைக் காலம்
இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப்பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில்இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது இலண்டன் மிசனரி சைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838, சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் இராபர்ட்டு கால்டுவெல்லும் ஒருவராவார். பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission)எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.
மொழியியல் ஆய்வுகள்
1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் .அதனால் இம்மொழிகளை எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். தமிழ் மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே குமரி முனைக்குத் தென்பால் உள்ள பெருநாட்டில் முதன் முதல் தோன்றி வாழ்ந்த நன்மக்களே ஒரு காலத்தில் இந்திய நாடெங்கும் பரவிய தமிழர் ஆவர். தமிழரை வடமொழியாளர் திராவிடர் என்று அழைத்தனர். குமரிக் கண்டத்தைக் கடல் கொண்ட பொழுது இவருள் சில பகுதியினர் கடல் வழியாகவும், நில வழியாகவும் பெலுசித்தான், மெசபடோமியா முதலிய வடமேற்கு ஆசிய நாடுகளில் சென்று வாழ்ந்தனர். – அறிஞர் கால்டுவெல்
வரலாற்று ஆய்வுகள்
திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள்முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் பெரும் பேறாக "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார். இது 1881 ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட இராபர்ட்டு எரிக்கு ஃபிரிக்கென்பர்க்கு (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.
கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்
• நற்கருணை தியான மாலை (1853)
• தாமரைத் தடாகம் (1871)
• ஞான ஸ்நானம் (கட்டுரை)
• நற்கருணை (கட்டுரை)
• பரதகண்ட புராதனம்
கால்டுவெல் இயற்றிய ஆங்கில நூல்கள்
• திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856)
• திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு (A Political and General History of Tinnevely, 1881)
இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்தி ஒரு திரைப்படம் மூலம் 1965 ஆண்டு வாக்கில் பிரபல நடிகராக இருந்த ஐயா ஏவிஎம் ராஜன் அவர்களுக்கு சொல்லப்பட்டு இருக்கிறது.ஆனால் 1980 களில் தான் அவர் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்....
03/05/2026
மனுஷன் தனக்குத் தேவர்களை உண்டுபண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே.
எரேமியா 16:20
Click here to claim your Sponsored Listing.